×

நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற சர்வே

வத்தலக்குண்டு, அக். 1: நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் சர்வே அளவீடும் பணியில் ஈடுபட்டனர். நிலக்கோட்டையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. அவற்றை தீர்க்கநெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் இருபுறமும் தலா 6 அடி வீதம் அகலப்படுத்தினர். தொடர்ந்து சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தனர். அதன்பிறகு நிலக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தீர்ந்து வாகனங்களும், பொதுமக்களும் நிம்மதியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் மட்டும் போக்குவரத்து நெரிசல் அளவுக்கு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளார்கள் சக்திவேல், அன்பையா மற்றும் அலுவலர்கள் அணைப்பட்டி சாலையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று அணைப்பட்டி சாலை சந்தை பகுதியில் சர்வேயர்களின் உதவியோடு அளவீடு செய்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்பு அகற்றுகிறோம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் தவறும்பட்சத்தில் பொக்லைன் மூலம் அகற்றுவோம் அதற்கு ஏற்படும் சேதங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பேற்காது’ என்றனர்.

Tags : road ,Nilakkottai - Dam ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...